அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா அதிரடி- டெல்லி தூதரகம் முன்பிருந்த பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்
டெல்லி: அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே மீதான அவமரியாதை கைது நாட்டு மக்களிடயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இந்தியா அதிரடி நடவடிக்கைகளில் குதித்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான சில கடுமையான நடவடிக்கைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு போடப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்றுமாறு போடப்பட்ட உத்தரவு.
அந்த உத்தரவின்படி இன்று மாலையில் டெல்லி போலீஸார் நடவடிக்கையில் குதித்தனர். தூதரகம் முன்பு போடப்பட்டிருந்த சாலைத் தடுப்புகளை போலீஸார் அகற்றினர்.

அமெரிக்கர்கள் எப்போது்மே பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் உஷாராக, கவனமாக இருப்பார்கள் என்பதால் அதில் கை வைத்துள்ளது இந்தியா. இது அமெரிக்காவை நிச்சயம் தட்டி எழுப்பும் என்று இந்தியா கருதுகிறது.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இந்த தடுப்புகள்தான் இன்று அகற்றப்பட்டன.

தூதரகங்களுக்கான மது, உணவுக்கு தடை
அதேபோல அமெரிக்க தூதரகம், இந்தியாவில் உள்ள பிற துணைத் தூதரகங்களுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள், உணவுப் பொருட்களுக்கான அனுமதியையும் நிறுத்த இந்தியா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க பள்ளி ஆசிரியர்களின் விசா விவரத்தை சேகரிக்க உத்தரவு
அதேபோல இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவிடம் சமர்ப்பிக்கவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications