ஆவேச பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்.. ஏவுகணைகளை பார்த்து ஓட்டம் பிடித்த பாக். ராணுவம்.. பரபர வீடியோ
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாக். வீரர்கள் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறி வந்த பாகிஸ்தான் ராணுவ படை, சில மணி நேரங்களுக்கு முன் உரி பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியது.
அதோடு இன்னொரு பக்கம் குரேஸ் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
உரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் 3 இந்திய பொதுமக்கள் பலியாகி உள்ளனர். அதோடு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவம் பதிலடி
இதையடுத்து இந்திய ராணுவம் அங்கு உடனே பதிலடி தாக்குதலை நடத்தியது . ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, குப்வாரா மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் இருந்து, பாகிஸ்தான் பதுங்கு குழிகளை குறி வைத்து தாக்கின இந்திய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள்.

ஏவுதளங்கள் குறி
பாகிஸ்தானிய வெடிமருந்துகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கட்டிடங்கள் மற்றும் பங்கரவாதிகளுக்கான ஏவுதளங்களும் குறி வைத்து தாக்கப்பட்டன.
இது தொடர்பான வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஓட்டம் பிடிக்கும் பாகிஸ்தான் ராணுவம்
மற்றொரு வீடியோவில், இந்திய ராணுவத்தால் சுடப்பட்ட ஒரு பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை பதுங்கு குழியை நோக்கி பறக்கும்போது ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள, தலைதெறிக்க வேகமாக ஓடுவதை பார்க்க முடிந்தது.
|
எல்லையில் கண்காணிப்பு
இந்தியாவின் ஆவேச பதிலடியில், சுமார் 7க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் ஆவேசத்தால், நிலைகுலைந்து போயுள்ளது பாகிஸ்தான் ராணுவம். எனினும், எல்லையில், இந்திய ராணுவம் கூடுதல் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எந்த சவாலையும் எதிர்த்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications