அமெரிக்காவில் இந்தியர் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தில் உரிய நடவடிக்கை: வெளியுறவுத் துறை
டெல்லி: அமெரிக்காவில் முதிய வயதுள்ள இந்தியர் ஒருவர் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான குஜராத்தைச் சேர்ந்த சுரேஷ்பாய் பட்டேல் என்பவர் கடந்த 6ம் தேதி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் புகாரை தொடர்ந்து, நியூயார்க் போலீசார் அவரை தாக்கியுள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதில் சுரேஷ்பாய் பட்டேல் சுயநினைவை இழந்தார். அவருக்கு முடக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சையது அக்பரூதின் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அட்லாண்டா மாகாணத்தில் உள்ள நமது தூதரக அதிகாரிகள், சம்பவம் நடந்த மேடிசன் நகர நிர்வாகத்தையும், பாதிக்கப்பட்ட சுரேஷ் பட்டேலின் குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேடிசன் நகர காவல்துறைத் தலைவர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications