பிரதமர் மோதியின் தாயார் காலமானார்
பிரதமர் நரேந்திர மோதியின் தாயார் ஹிராபென் உடல்நலக்குறைவு காரணமாக ஆமதாபாத் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 100.
“ஒரு மகிமையான நூற்றாண்டு, இறைவனின் காலடியை அடைந்திருக்கிறது” என்று தனது தாயின் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ஹிராபென் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகரில் பிறந்தார். ஹீராபென் பிறந்த சில நாட்களில் அவரது தாயார் அதாவது பிரதமர் மோதியின் தாய்வழி பாட்டி இறந்துவிட்டார். அது உலகம் முழுவதும் தொற்றுநோய் ஏற்பட்டிருந்த காலம்.
"என் அம்மாவின் குழந்தைப் பருவம் தாயின்றி கழிந்தது, அம்மாவைப் பார்க்க முடியவில்லை, மடியில் தலையைப் புதைத்துக் கொள்ள முடியவில்லை, அம்மாவுக்கு எழுத்து அறிவு கூட இல்லை, பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிக்கு.வீட்டின் கதவைக்கூட பார்க்கவில்லை.வீட்டில் எங்கும் ஏழ்மையை மட்டுமே பார்த்தார்” என்று தனது தாய் பற்றி மோதி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோதியின் தாயார் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













Click it and Unblock the Notifications