இந்திய துணை ராணுவத்தில் இனி அதிக பெண் காவலர்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு
டெல்லி: இந்தியத் துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சகஸ்திர சீமா பால் ஆகியவற்றில் மொத்தம் 9 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இதனால் மேலும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அவசியம்:
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குழுவின் 6 ஆவது பரிந்துரை அறிக்கை, துணை ராணுவ படைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவது உடனடி அவசியம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது.
முதல்கட்ட பணி:
இந்த சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இதில், "முதல் கட்டமாக படைக் காவலர் தகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
33 சதவீதம் இட ஒதுக்கீடு:
மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகியவற்றில் 33 சதவீத இடஒதுக்கீடும், எல்லை பாதுகாப்பு படை, சகஸ்திர சீமா பால், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் ஆகிய எல்லை படை பணிகளுக்கு 15 சதவீத பெண்களும் காவலர்களாக நிரப்பப்படுவார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேம்படுத்தும் நடவடிக்கை:
மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications