Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய துணை ராணுவத்தில் இனி அதிக பெண் காவலர்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியத் துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சகஸ்திர சீமா பால் ஆகியவற்றில் மொத்தம் 9 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

Indian Police Force to have more women

இவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இதனால் மேலும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அவசியம்:

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குழுவின் 6 ஆவது பரிந்துரை அறிக்கை, துணை ராணுவ படைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவது உடனடி அவசியம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது.

முதல்கட்ட பணி:

இந்த சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இதில், "முதல் கட்டமாக படைக் காவலர் தகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

33 சதவீதம் இட ஒதுக்கீடு:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகியவற்றில் 33 சதவீத இடஒதுக்கீடும், எல்லை பாதுகாப்பு படை, சகஸ்திர சீமா பால், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் ஆகிய எல்லை படை பணிகளுக்கு 15 சதவீத பெண்களும் காவலர்களாக நிரப்பப்படுவார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேம்படுத்தும் நடவடிக்கை:

மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+