'பான் பராக்'காரர்களுக்கு சாதகமான பார்லிமென்டரி குழு அறிக்கை.. 'ஷாக்'கில் புகையிலை எதிர்ப்பாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புகையிலையை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்று இந்தியாவில் இதுவரை நடந்த எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை என்று நாடாளுமன்றக் குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புகையிலை பொருட்களில் அபாய எச்சரிக்கையை 40 சதவிகிதத்தில் இருந்து 85 சதவிகிதமாக அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலீப்காந்தி தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிரூபணமில்லை...

நிரூபணமில்லை...

இந்தக் குழு தங்களது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், புகையிலை பொருட்களின் பயன்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட எந்தவித ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஆய்வுகள்...

வெளிநாட்டு ஆய்வுகள்...

வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இதுவரை புகையிலைக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முடிவுகள் மாறுபடும்...

முடிவுகள் மாறுபடும்...

இந்தியாவில் பிரத்யேக ஆய்வு நடத்தினால் முடிவுகள் வேறாக இருக்கக் கூடும் என்று அந்தக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை அனைவரையும் அதிர வைத்துள்ளது.

வருத்தம்...

வருத்தம்...

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே கூறுகையில், நாடாளுமன்ற குழுவின் அறிக்கை மிகவும் வருத்தம் அளிக்கிறது. புகையிலையை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்று நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவருக்குமே தெரியும்.

ஆதாரங்கள் தருகிறோம்...

ஆதாரங்கள் தருகிறோம்...

மத்திய குழு இதனை ஏன் மறுக்கிறது என்பது தெரியவில்லை. இதற்கு ஆதாரங்கள் வேண்டும் என அவர்கள் விரும்பினால் அதனை தர நாங்களும் தயார் என்றார் சுலே.

சட்டம்...

சட்டம்...

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளில் உடல் நலம் பாதிப்பு தொடர்பான விளம்பரம் இடம் பெற வேண்டும். மேலும் சிறிய எழுத்துக்களில் இருப்பது போதாது என்றும், இது இந்த விளம்பரத்தில் 85 சதவீதம் இடம் பெற வேண்டும் என்றும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

கால அவகாசம் ?

கால அவகாசம் ?

இதற்கான காலக்கெடு ஏப்ரல் 1ம் தேதியுடன் காலவதியாகிறது. ஆனால் சிகரெட் மற்றும் புகையிலை நிறுவனங்கள் இதற்கு உடன்பட்டதாக தெரியவில்லை. மத்திய அரசும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. மத்திய அரசு இன்னும் கால அவகாசம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+