குடியரசுத்தலைவர் 23ம் தேதி ராமேஸ்வரம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசுத்தலைவர் 23ம் தேதி ராமேஸ்வரம் வர உள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
டெல்லி : குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 23ம் தேதி ராமேஸ்வரம் கோவிலுக்கு வர உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக கடந்த ஜூலை மாதம் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். ராமேஸ்வரம் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக அவர் வரும் 23ம் தேதி தமிழகத்திற்கு முதல் சுற்றுப்பயணம் வர உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

டெல்லியில் இருந்து 23ம் தேதி காலை தனிவிமானத்தில் கிளம்பும் அவர், பகல் 10.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன் பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11 மணியளவில் மண்டபம் செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமிகள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார்.
கோவிலில் தரிசனத்தை முடித்த பின், அங்கிருந்து புறப்பட்டு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மணி மண்டபம் சென்று அங்கு உள்ள கலாம் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். இதன் பின்பு மீண்டும் மதுரை வந்து அங்கிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கிளம்பி செல்வார் என்று அவரது பயணக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் குடியரசுத்தலைவர் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் ராமேஸ்வரம் கோவில், மண்டபம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொடர்ந்து மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து ராமேஸ்வரம் வர இருக்கும் குடியரசுத்தலைவரை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் மனு கொடுக்க உள்ளதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தனர். ஆனால், இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications