ரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் எளிய மாற்றம்: தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் தேர்வு எழுதலாம்!
ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை ரயில்வேத்துறை எளிமையாக்கியுள்ளது.
Recommended Video

டெல்லி: ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை ரயில்வேத்துறை எளிமையாக்கியுள்ளது.
இந்திய ரயில்வேயில் 89,409 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்ககளும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்திய ரயில்வேயில் குரூப் சி மற்றும் குரூப் சி ஒன்றாம் நிலை பிரிவுகளில் பிட்டர், கிரேன் டிரைவர், தச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பத்தில் மாற்றம்
சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் வேலை கிடைக்கும் வகையில் ரயில்வே விண்ணப்பங்களில் ரயில்வே அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

10 மற்றும் ஐடிஐ
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும் ஐடிஐ சான்றிதழும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும். இந்நிலையில் அனைத்து சமூதாயத்தினருக்கும் வேலை கிடைக்கும் வகையில் இந்திய ரயில்வே விண்ணப்பங்களை எளிதாக்கியுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 15 மொழிகள்
அதன்படி ரயில்வே தேர்வுக்கான கேள்வித்தால் 15 மொழிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தி, இங்கிலிஷ், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு தளர்வு
இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, யூஆர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்வு 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு செய்யப்பட்டுள்ளது.

ரூ.400 திருப்பி வழங்கப்படும்
தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படாமல்ல 500 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் போது 400 ரூபாய் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications