இந்திய ரூபாய் மதிப்பில் ஒரே நாளில் அடுத்த சரிவு.. தற்போதைய மதிப்பு என்ன தெரியுமா?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஒரே நாளில் அடுத்த மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு உள்ளது. இன்று மேலும் இந்த மதிப்பில் சரிவு ஏற்படும் எனப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இரண்டு வாரம் முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது.
தற்போது தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும்.

70 ரூபாயை தாண்டியது
கடந்த வாரம் இந்திய ரூபாய் மதிப்பு மோசமான நிலையை அடைந்தது. தொடர்ந்து 70 ரூபாயிலேயே நீடித்து வந்தது. அதன்பின் கடந்த 5ம் தேதி 72 ரூபாய் ஆனது. அதற்கு மறுநாள் 72.10 ரூபாயை தாண்டியது. அன்றுதான் முதல்முறை 72 ரூபாயை தாண்டியது இந்திய ரூபாய் மதிப்பு.

கொஞ்சமாக முன்னேற்றம் கண்டது
அதன்பின் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. 10 பைசா வரை முன்னேற்றம் அடைந்தது. காலை 33 பைசா வீழ்ச்சி அடைந்தது. இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.33 ரூபாய் ஆகியது. தற்போது இதில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.66 ரூபாய் ஆகி உள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மிக மோசம்
ஒரே இரவில் 66 காசுகள் சரிந்துள்ளது. இந்திய வரலாற்றில் இது மோசமான மதிப்பாகும். இதற்கு முன் இவ்வளவு மோசமான நிலை இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டது இல்லை. மிகவும் ஏழ்மையான நாடுகள் மட்டுமே இந்த பண மதிப்பை கொண்டுள்ளது.

100 ரூபாய்
இது விரைவில் 100 ரூபாயை அடையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்பிஐ அதற்கு வாய்ப்பளிக்காது. உடனடியாக தலையிட்டு, தனது டாலர் கையிருப்பு மூலம், பண மதிப்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு ஆர்பிஐயை இதில் தலையிட அனுமதிக்குமா என்று தெரியவில்லை .
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications