மோடி குறித்து பேஸ்புக்கில் கீழ்த்தரமான கார்ட்டூன் வெளியீடு - பூடானில் இந்திய ஆசிரியை டிஸ்மிஸ்!
தோகா: பூடானில் பிரதமர் மோடி பற்றி கீழ்தரமாக கேலி சித்திரம் வரைந்து பேஸ்புக்கில் வெளியிட்ட இந்திய ஆசிரியையை, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூடானில் உள்ள தோகாவில் உள்ள இந்திய பள்ளியில், இந்தியாவை சேர்ந்த ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கீழ்தரமாக கேலி சித்திரம் ஒன்றை வரைந்ததாகக் கூறப்படுகிறது. அதனை, அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டார். இதனால், அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

புகார் தொடர்பாக அந்த ஆசிரியையிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், 3 நாட்கள் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்.
ஆனால், தொடர்ந்து அவர் மீது புகார்கள் வந்ததாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியரை அழைத்த பள்ளி நிர்வாகம் அவரைத் தானாகவே தனது வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆசிரியையும் பள்ளி நிர்வாகத்தின் வற்புறுத்தலுக்கு பயந்து பணியை ராஜினாமா செய்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு ஆசிரியையின் நண்பர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு. அந்நாட்டு குடிமக்கள் தங்களது கருத்து சுதந்திரத்தை வெளியிட உரிமை உள்ளது' என்றனர்.
ஆனால், இது தொடர்பாக பள்ளியின் நிர்வாக தரப்பு அளித்த விளக்கத்தில், ‘மோடி பற்றிய கேலி சித்திரத்துடன் பள்ளியின் சின்னம் மற்றும் பெயரையும் அந்த ஆசிரியைக் குறிப்பிட்டிருந்தார். அதனால் பள்ளியின் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பூடானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நிறைய புகார்கள் வந்ததாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications