இ-போஸ்டல் ஆர்டர் முலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐ க்கு விண்ணப்பிக்கும் வசதி

Subscribe to Oneindia Tamil

Indians abroad can file RTI applications using e-postal orders
டெல்லி: இனி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களைப் பெற இயலும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் சில புதிய வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சில குறிப்பிட்ட தகவல்களை பெற சிக்கல் நீடித்து வந்தது.

இதுவரை தகவல் அறியும் சட்டத்தின் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்துவதிலும் தெளிவான நடைமுறை நெறிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்ததே இதற்கு முக்கியக் காரணம். ஆனால், தற்போது இந்த முறையை நிவர்த்தி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சகம் முன்வந்துள்ளது.

அதன்படி, உலகெங்கிலும் உள்ள 176 இந்திய உயர் தூதரகங்களின் மூலம் 'எலக்ட்ரானிக் இண்டியன் போஸ்டல் ஆர்டர்' எனப்படும் மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக தகவலுக்கான கட்டணத்தை செலுத்தி மனுதாரர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு இனி விண்ணப்பிக்கலாம்.

இதற்கென உருவாக்கப்பட்டுள்ள www.epostoffice.gov.in அல்லது www.indiapost.gov.in என்ற இணைய தளங்களில் மனுதாரர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதுமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+