ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போதுமே.. இந்தியாவின் முதல் "அரிசி ஏடிஎம்" மிஷின்.. சர்னு கொட்டுது பாருங்க
புவனேஸ்வர்: விவசாயிகளின் நன்மை கருதி, மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது,.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்திய விவசாயிகளின் நலனிலும், அவர்களின் நல்வாழ்விலும் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.. அந்தவகையில், விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, "பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனை ஆரம்பமாகி உள்ளது. இதில் கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கிறது.
மத்திய அரசு: எனினும், நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்தபடியே இருக்கிறது.. அதாவது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அதிகரித்து விட்டதாம்.. அதனால்தான், அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு 'பாரத் அரிசி' என்று பெயரிடப்பட்டது. கிலோ ரூ.29 என்று விலையும் நிர்ணயிக்கப்பட்டு, 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் பாரத் அரிசி கிடைத்து வருகிறது.
முறையற்ற பருவமழை, குறைவான விளைச்சல், போன்ற காரணங்களினால், அவ்வப்போது அரிசி விலை தாறுமாறாக உயர்ந்து வரும்நிலையில், மத்திய அரசின் பாரத் அரிசி திட்டமானது, பேருதவியாக இருந்து வருகிறது.
முதல் ஏடிஎம்: இந்நிலையில், மத்திய அரசு அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. அதன்படி, இந்தியாவிலேயே முதன்முறையாக புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம்-ஐ திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்த அரிசி ஏ.டி.எம் மையத்தை புவனேஸ்வரில் திறந்து வைத்திருக்கிறார்.
குறிக்கோள்: அப்போது அமைச்சர் பேசியபோது, "பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் குறிக்கோள். இது இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம். பல்வேறு சோதனைகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. ஒடிசாவில் 30 மாவட்டங்களில் அரிசி ஏடிஎம்-ஐ விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.
குடும்ப அட்டைத்தாரர்கள் அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தில் தங்களது குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு எண்ணை பதிவிட்டு அவர்களுக்கான 25 கிலோ அரிசியை பெற்றுச் செல்லலாம். இனி நீண்ட நேரம் நியாய விலை கடைக்கு முன்பு வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்க முடியும். இந்த முறை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும்" என்றார்..
பெரும் வரவேற்பு: ரேஷன் கார்டை ஏடிஎம் கொண்டு சென்று 25 கிலோ அரிசியை பெற்றுக்கொள்ளும் இந்த வசதியானது, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications