பாரிக்கர் விவகாரம்.. பாஜகவின் மனிதாபிமானமற்ற செயல்.. உமர் அப்துல்லா சாடல்
Recommended Video

கோவா: கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நோய் பாதிப்பில் இருந்து சமாளித்து மீண்டு வரவேண்டும் அதற்கு, அவருக்கு அழுத்தம் தரக் கூடாது என்ற ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பனாஜியில் ஓடும் மண்டோவி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலப் பணிகளை அம்மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பார்வையிட்டார். மூக்கில் உணவு குழாய் மாட்டியிருந்த நிலையில் அவர் பார்வையிட்டபோது எடுத்த புகைப்படம் செய்தியாக வெளியானது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, கணைய நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர், மூக்கில் சொருகப்பட்ட குழாயுடன், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு, பொறியியலாளர்களுடன் கலந்தாலோசிக்கிறார். இது "மனிதாபிமானமற்றது" என்றும் பணி செய்வதை புகைப்படமாக வெளியிடுமாறு வற்புறுத்தி அவருக்கு அழுத்தம் தரப்படுவதாக கூறினார்.
He has a tube inserted through his nose into his digestive tract. How inhuman to force him to continue working & doing photo ops. Why can’t he be allowed to deal with his illness without all this pressure & tamasha? https://t.co/iq0dwXCHmE
— Omar Abdullah (@OmarAbdullah) December 16, 2018
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த அக்டோபர் 14 ம் தேதி தான், மனோகர் பாரிக்கர் டிஸ்சார்ஜ் ஆனார். அதன் பிறகு முதல் முறையாக அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, மண்டோவி ஆற்று பாலம் பணிகள் மட்டுமின்றி, ஜூவாரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பணிகளையும் முதல்வர் மனோகர் பாரிக்கர் பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம், நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர், அலுவலகத்திற்கு வராமல் இருப்பதால் நிர்வாகப் பணிகள் சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!








Click it and Unblock the Notifications