மேகி நூடுல்ஸின் குட்டை உடைத்த உ.பி.யில் குளுகோன் டி பாக்கெட்டில் பூச்சிகள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சக்தி அளிக்கும் குளுகோன் டி பாக்கெட்டில் பூச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதசே மாநிலத்தில் தான் மேகி நூடுல்ஸை ஆய்வு செய்து அதில் மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதே உத்தர பிரதேசத்தில் குளுகோன் டி பாக்கெட்டில் பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் புலந்சாஹர் நகரைச் சேர்ந்தவர் பப்லு. அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலசரக்கு கடைக்கு சென்று குளுகோன் டி பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து குளுகோன் டியை கலக்கி அவரும், அவரது குடும்பத்தாரும் குடித்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் அனைவரும் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளனர்.
அதன் பிறகு தான் குளுகோன் டி பாக்கெட்டில் பூச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பப்லு மருந்து பாதுகாப்பு அதிகாரி சிவதாஸிடம் புகார் அளித்துள்ளார். பப்லுவின் புகாரை அடுத்து அவர் வாங்கிய கடையில் இருந்து 4 குளுகோன் டி பாக்கெட்டுகளை பெற்று சோதனைக்காக லக்னோவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வு முடிவு வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஹெச்.ஜே. ஹெய்ன்ஸ் நிறுவனம் தான் குளுகோன் டியை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications