சிறைகளில் சிசிடிவி கட்டாயம், லாக்-அப்புகளில் பொருத்த பரிசீலிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
டெல்லி: சிறைச்சாலைகளில் மனித உரிமை மீறப்படாமல் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து சிறைகளிலும் ஓராண்டு காலத்திற்குள், சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. போலீஸ் லாக்-அப்புகளிலும் சிசிடிவிகளை பொருத்துவது பற்றி பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.

சிறைத்துறை சீரமைப்பு குறித்தும், மனித உரிமைகள் ஆணையத்தை மாநில அரசுகள் முடக்குவது குறித்தும் திலிப் கே.பாசு என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவை நீதிபதிகள் டி.எஸ்.தாகூர் மற்றும் ஆர்.பானுமதி பெஞ்ச் விசாரித்து வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் கூறியுள்ளதாவது: காவல் நிலையங்களில் குறைந்தது இரு பெண் போலீசாராவது பணியில் இருக்க வேண்டும். நாடுமுழுவதிலுமுள்ள மத்திய மாநில சிறைச்சாலைகளில் ஓராண்டுக்குள் சிசிடிவியை கட்டாயம் பொருத்த வேண்டும். அதிகபட்சம் இரு வருடங்களுக்குள்ளாக கேமராக்களை நிறுவ வேண்டும். இதன் மூலம் மனித உரிமை மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும்.
மேலும், போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப்புகளையும் சிசிடிவி கொண்டு கண்காணிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். டெல்லி, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மனித உரிமை ஆணையத்திற்கு நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications