சிறைகளில் சிசிடிவி கட்டாயம், லாக்-அப்புகளில் பொருத்த பரிசீலிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
டெல்லி: சிறைச்சாலைகளில் மனித உரிமை மீறப்படாமல் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து சிறைகளிலும் ஓராண்டு காலத்திற்குள், சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. போலீஸ் லாக்-அப்புகளிலும் சிசிடிவிகளை பொருத்துவது பற்றி பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.

சிறைத்துறை சீரமைப்பு குறித்தும், மனித உரிமைகள் ஆணையத்தை மாநில அரசுகள் முடக்குவது குறித்தும் திலிப் கே.பாசு என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவை நீதிபதிகள் டி.எஸ்.தாகூர் மற்றும் ஆர்.பானுமதி பெஞ்ச் விசாரித்து வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் கூறியுள்ளதாவது: காவல் நிலையங்களில் குறைந்தது இரு பெண் போலீசாராவது பணியில் இருக்க வேண்டும். நாடுமுழுவதிலுமுள்ள மத்திய மாநில சிறைச்சாலைகளில் ஓராண்டுக்குள் சிசிடிவியை கட்டாயம் பொருத்த வேண்டும். அதிகபட்சம் இரு வருடங்களுக்குள்ளாக கேமராக்களை நிறுவ வேண்டும். இதன் மூலம் மனித உரிமை மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும்.
மேலும், போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப்புகளையும் சிசிடிவி கொண்டு கண்காணிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். டெல்லி, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மனித உரிமை ஆணையத்திற்கு நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications