நிபாவிற்கு எதிராக சிறந்த செயல்பாடு.. கேரளாவிற்கு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் பாராட்டு
நிபா வைரஸ் பரவலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதற்காக கேரள அரசுக்கு, அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பரவலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதற்காக கேரள அரசுக்கு, அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
கேரளாவில் பரவி வந்த நிபா வைரஸ் காரணமாக, மொத்தமாக 13 பேர் இறந்து இருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.ஆனால் வைரஸ் இன்னும் கேரளாவை தவிர வேறு மாநிலங்களில் பரவவில்லை.

இதற்கு எதிராக இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.நிபா வைரஸ் வெவ்வால்கள் மூலம் பரவும் நோயாகும். வௌவால்கள் இந்த வைரஸ் தாக்கிய பின் பழங்களில் அமர்வதால் பரவுகிறது. வெவ்வால்கள் தாக்கிய பழங்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது.
இதனால் பழங்களை மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. விலங்குகள் மூலம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அம்மாநில அரசு இதற்கு எதிராக துரிதமாக செயல்பட்டது.
பெரிய அளவில் சுகாதர பணிகளை முடுக்கிவிட்டு அதற்காக தனி பணியாளர்களை நியமித்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான பலனாக அங்கு 90 சதவிகித வைரஸ் பாதிப்பு கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிபா வைரஸ் பரவலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதற்காக கேரள அரசுக்கு, அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள இன்ஸ்டியூட் பார் ஹியூமன் வைரலாகி கேரளா அரசுக்கு இந்த பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது.
இதை எப்படி கட்டுப்படுத்தினார்கள் என்று கேரளா அரசிடம் ஆலோசனை கேட்கவும் அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவில் இதற்காக ஆராய்ச்சி மையம் துவங்கவும் முன்வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் நிறைய தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் தனியாக ஒரு மாநிலத்தை இந்த நிறுவனம் பாராட்டுவது இதுவே முதல்முறை.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications