சீக்கியர் வேடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி பஞ்சாப்பில் பயங்கர வன்முறைகளை தூண்ட பாக். சதி- திடுக் தகவல்
சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர் போல தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து பயங்கர வன்முறைகளை கட்டவிழ்த்துவிட பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பஞ்சாப் மாநில அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனித நூல் திருடப்பட்டு பின்னர் கிழித்தெறியப்பட்டு நடுவீதியில் வீசப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்களது புனித நூலை அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி சீக்கியர்கள் தொடர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மிகப் பெரிய வன்முறையாக வெடித்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் மத்திய அரசின் உளவுத்துறை சார்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ஐ.எஸ்.ஐ. அமைப்பு, சீக்கியர்களின் நடை, உடை, பாவனைகளை கற்றறிந்துள்ள பயங்கரவாதிகளை சீக்கியர் வேடத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஊடுருவ செய்திருப்பதாகவும், இவர்களை கொண்டு, மாநிலத்தில் மிகப் பயங்கர வன்முறையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாசவேலைக்காக 15 லிருந்து 20 வரையிலான பயங்கரவாதிகளுக்கு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமையன்று ஃபாரித் கோட் பகுதியில் இப்படி ஊடுருவிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்களுக்கு துபாய் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து இவர்களுக்கு நிதி உதவி கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications