பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவில் நாசவேலை?– “ரா” உளவுப் பிரிவு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ள அத்தகவலில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1962 இல் நடைபெற்ற இந்தியா - சீனா இடையிலான போர் மற்றும் 1965 இல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்களை தொடர்ந்து இந்தியாவின் உளவு அமைப்பு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உளவு பிரிவின் இந்த எச்சரிக்கை தகவலைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பினை வலுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications