பெரியாருக்கு வாழ்த்து சொல்றீங்க... தண்ணீர் கொடுக்கலாம்ல- சித்தராமையாவுக்கு குவியும் பதில்கள்!
பெரியார் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் வாழ்த்து சொன்ன கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு டுவிட்டர்ஸ், விதவிதமான பதில்களைச் சொல்லி வருகின்றனர்.
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பெரியார் பிறந்தநாளுக்கு டுவீட்டரில் வாழ்த்துத் தெரிவித்தார். அதற்கு பலர் நன்றி தெரிவித்து கூறுகையில், இவ்வளவு பேசியும் தண்ணீர் தர மாட்டேன் என்கிறீர்களே எனவும் கூறியுள்ளனர்.
நேற்று தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் ஆர்ஜேடி கட்சி லாலு பிரசாத் உள்ளீட்ட பல தலைவர்கள் பெரியாருக்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பெரியாருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். மேலும் பெரியாரின் கருத்துகள் நாட்டுக்கு ஊக்கம் தருபவை என குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய வாழ்த்து டுவிட்டுக்கு பலர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். சிலர், இவ்வளவு பேசியும் காவிரி தண்ணீர் தர மறுக்கிறீர்களே என முதல்வர் சித்தராமையாவின் டுவிட்டுக்கு பலர் பதில் அளித்திருந்தனர்.
|
தண்ணி தரமாட்டேன்றீங்களே!
தோழர். சே. உலகநாதன் என்பவர், இவ்வளவு பேசறீங்க. ஆனால் காவிரியில் தண்ணீர் தர மாட்டேன் என சொல்கிறீர்களே தோழர் என கூறியுள்ளார்.
|
பெரியார் கருத்துகளை உயிர்ப்போடு வைத்திருப்போம்!
ரேகா கண்ணதாசன் என்பவர், எங்களின் உளப்பூர்வ நன்றிகள். பெரியாரின் கருத்தியல்களை உயிர்ப்போடு வைத்திருக்க ஒன்றிணையுங்கள் என பதில் அளித்துள்ளார்.
|
பெரியார் இப்போ தேவை
முத்துமணி நன்னன், பெரியாரின் கருத்துகள் இந்த நேரத்தின் அவசியத் தேவை எனக் கூறியுள்ளார்.
|
பிரதமர் மோடிக்கும் ஒரு வாழ்த்து சொல்லியிருக்கலாமே!
ஜிஎஸ்கே ரெட்டி, பெரியாரை நினைவில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் பிரதமருக்கு வாழ்த்து சொல்லவில்லையே என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
|
நன்றிங்க முதல்வர்!
புனிதன், திராவிடத் தலைவர் பெரியாரை நினைவில் வைத்திருந்ததற்கு நன்றிகள் என கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications