மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட், சேட்டிலைட் இருந்தது.. அடித்து சொல்லும் திரிபுரா முதல்வர்!
மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் மற்றும் சேட்டிலைட் இருந்தது என திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கூறியுள்ளார்.
Recommended Video

அகர்தலா: மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் மற்றும் சேட்டிலைட் இருந்தது என திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கூறியுள்ளார்.
திரிபுராவில் கடந்த கால் நூற்றாண்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்று வந்தது. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதன் மூலம் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.
கடந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாரதீய ஜனதா, இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் தேப் பதவியேற்றார்.

இணையதள பயன்பாடு
இந்நிலையில் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இணையதள பயன்பாடு என்பது மகாபாரத காலத்திலிருந்தே உள்ளது என்றார்.

செயற்கைகோள் தொடர்பு
கண்பார்வையற்ற திரிதராஷ்டிரர், குருசேத்ர யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, போர்க்களத்தின் அருகே இல்லாதபோதே, அங்கு நடைபெறும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இது அப்போது இருந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பின் மூலமே சாத்தியமானது என்றும் பிப்லாப் தேப் தெரிவித்தார்.

திரிபுரா முதல்வர்
ஐரோப்பிய யூனியன்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணையளதம் தங்களின் கண்டுபிடிப்பு என கூறலாம். ஆனால், உண்மையில், இவை அனைத்தும் இந்தியாவின் தொழில்நுட்பம் தான் என்றும் திரிபுரா முதல்வர் தெரிவித்துள்ளார்.

பணக்கார கலாச்சாரம்
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இணையதளம் மற்றும் செயற்கைகோள்கள் இருந்துள்ளன என்றும் அவர் கூறினார். மிகவும் பணக்கார கலாச்சாரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது என்றும் பிப்லாப் தெரிவித்தார்.

இந்தியர்களே..
இன்றும் கூட இணையதளம் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தில் நாம் முன்னோடியாக இருக்கிறோம் என்ற அவர், மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் கூட, அந்த நிறுவனத்தில் பெரும்பாலான என்ஜினியர்கள் இந்தியர்களே என்றார்.

சர்ச்சை
திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் இன்டர்நெட் மற்றும் சேட்டிலைட் சேவை மகாபாரத காலத்திலேயே இருந்ததாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications