20 தமிழர்கள் படுகொலை: விசாரணை கோரும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
டெல்லி: ஆந்திரப் பிரதேச போலீசார் நடத்திய சந்தேகத்திற்கிடமான, சட்ட விரோதமான கொலைகள் தொடர்பாய் விசாரணை செய்யப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

செம்மரக்கட்டை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிற இருபது பேரை ஆந்திரப் பிரதேச போலீசார் சுட்டுக்கொன்றது தொடர்பாய், சுயேச்சையான முறையில் துரித விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு இன்று குரல் கொடுத்துள்ளது. இக்கொலைகள், சட்டவிரோதமானவை என கண்டறியப்பட்டால், அவற்றிற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது குறித்து பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கூறுயிருப்பதாவது,
ஏப்ரல் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, ஆந்திரப் பிரதேச போலீசாரும் வனத்துறை அதிகாரிகளும் சேர்ந்து, சித்தூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிற 20 பேரை சுட்டுக்கொன்று, எட்டு பேரை காயப்படுத்தியுள்ளனர்.
செம்மரக்கட்டைக்காக சட்ட விரோதமாய் மரங்களை வெட்டுபவர்களை போலீசார் கண்டுபிடித்ததாக பத்திரிக்கையாளர்களிடம் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். சரணடையுமாறு அந்நபர்களிடம் சொல்லப்பட்ட போது, அவர்கள் கற்களையும் கோடாரிகளையும் கொண்டு போலீசாரைத் தாக்கியதால், தற்காப்புக்காக அவர்களை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனாலும், போலீஸ் அதிகாரி எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதுகிலேயே சுடப்பட்டுள்ளனர்.
"போலீசார் அளவுக்கதிகமான படைபலத்தை உபயோகித்தார்களா என்பதையும் இக்கொலைகள் யாவும் ‘போலி என்கவுன்ட்டர்களா' அல்லது சட்டத்திற்கு அப்பாற்பட்ட தண்டனைகளா என்பதையும் தீர்மானிப்பதற்கு ஓர் குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும்" என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவின் விபி அபிர் கூறியுள்ளார். "போலீசார் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்பதுடன் அப்படிப்பட்டவர்கள் என்பதாக கருதப்படக் கூடாது."
"உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முற்றிலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் தவிர, கொல்லுதற்குரிய செயல் மேற்கொள்ளப்படக் கூடாது."
இச்சம்பவம், "தனிநபர்களின் மனித உரிமைகளை கடுமையாய் மீறியுள்ளது" எனவும், "இவ்வாறு சுட்டுக் கொன்றது, 20 நபர்களின் உயிர்களைப் பறித்துள்ளதால், இதை தற்காப்புக்கானது என நியாயப்படுத்த முடியாது" எனவும் இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள், போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் இச்செயல்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மூத்த அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் இது கேட்டுக் கொண்டுள்ளது.
சமீப வருடங்களில், செம்மரக்கட்டை கடத்துவதாக சந்தேகிக்கப்பட்ட பலரும் போலீசாரால் ‘என்கவுன்ட்டர்' மூலம் கொல்லப்பட்டுள்ளனர். மே 2014-இல், சித்தூரில், கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்பட்ட மூவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் ஐந்து பேர் கடத்தல்காரர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களில், சந்தேகிக்கப்படுகிற கடத்தல்காரர்களால் அரசு அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
"பல நிகழ்வுகளில், கடத்தல்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யாவரும், கிரிமினல் கும்பல்களால் ஏழை மரம் வெட்டுபவர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களாவர்" என்றார் விபி அபிர். "செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துவது என்பது மனித உரிமைகளை அலட்சியம் செய்வதற்கான விலக்கு எனுமாறு செயல்படுத்தப் படக்கூடாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications