ஐபிஎல் 2023: தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட இல்லாத சிஎஸ்கே
மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோகித் சர்மாவும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேலும் இருக்கும் ஐபிஎல் தொடரில், 15 ஆண்டுகள் ஆன பின்னரும் சென்னை அணிக்கு மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் முன்னிலைப்படுத்தபடுவதில்லை.
2023ஆம் ஆண்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த யாருமே இல்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
ஐபிஎல் 'மினி' ஏலம்
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 16வது ஐபிஎல் தொடருக்கான 'மினி' ஏலம் சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக புதிதாக 7 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு சென்னைக்காக ஆடிய 18 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதையடுத்து 16வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் 25 வீரர்கள் அடங்கிய பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி செய்தது.
தோனி தலைமையிலான இந்த அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி உள்ளிட்ட 8 வெளிநாட்டு வீரர்களும், 17 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
https://twitter.com/ChennaiIPL/status/1606343899928178688?s=20&t=3BGn7E2ZCkaZZjZoVuZqMg
2023ஆம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வோர் அணியும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் எடுத்து முடித்துள்ளன. இந்நிலையில், 25 பேர் அடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் கூட இடம்பெறவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடும் முக்கிய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தங்கராசு நடராஜன், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் என யாருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏன் ஏலம் எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்புகின்றனர் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள்.
https://twitter.com/reavan/status/1606345031907803136?s=20&t=Q9NitOhCVUA5mZAHjF-DaQ
ஏலத்தில் என்ன நடந்தது?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் ஆகிய இருவரையும் இந்த ஆண்டு தக்கவைக்கவில்லை.
மாறாக சமீபத்தில் நடந்த ஏலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான ஜெகதீசனை மட்டும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது சென்னை அணி. கொல்கத்தா அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே ஜெகதீசன் நாராயணை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவிய நிலையில், இறுதியில் கொல்கத்தா அணி ஜெகதீசனை 90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.சென்னை அணி தனது கையிருப்பில் இன்னும் 1.5 கோடி ரூபாய் மீதம் வைத்திருக்கும் நிலையில், ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க 85 லட்சம் வரை கேட்டது.
சென்னை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனி விளையாடும் நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரான ஜெகதீசனை கடந்த ஆண்டு வரை சென்னை அணி விளையாட வாய்ப்பு வழங்காமல் பென்ச்சில் அமர வைத்து இருந்தது.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெகதீசனைத் தவிர தமிழ்நாட்டை சேர்ந்த வேறு எந்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யவில்லை.
"ஐபிஎல் என்பது பொழுதுபோக்கை மையப்படுத்தி நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் போட்டி. அதனால் சென்னைக்கு அணிக்கோ, வேறு எந்த அணிக்கோ ஒரு மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை தங்கள் அணிக்கு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை" என்கிறார், சென்னையை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகருமான செல்வ முத்துகுமார். ஆனால் சென்னை அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களை பெயரளவில் கூட எடுக்காமல் இருப்பது இளம் கிரிக்கெட் வீரர்களிடம் தவறான முன்னுதாரணமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு விளையாடும் தமிழக வீரர்கள் யார்?
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இல்லை என்றாலும், வேறு சில அணிகள் தமிழக வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி
- விஜய் சங்கர்
- சாய் கிஷோர்
- சாய் சுதர்ஷன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- ஜெகதீசன் நாராயண்
- வருண் சக்ரவர்த்தி
ராஜஸ்தான் ராயல்ஸ்
- முருகன் அஸ்வின்
- ரவிச்சந்திரன் அஸ்வின்
சன் ரைசர்ஸ் ஐதராபாத்
- தங்கராசு நடராஜன்
- வாஷிங்டன் சுந்தர்
பஞ்சாப் கிங்ஸ்
- ஷாருக் கான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ
- தினேஷ் கார்த்திக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications