காஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான 2 நாட்கள் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் விலாயத் ஆப் ஹிந்த் எனும் தங்களது கட்டுப்பாட்டில் ஒரு மாகாணத்தை உருவாக்கிவிட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பிரகடனம் செய்துள்ளது. ஆனால் சர்வதேச அளவில் தீவிரவாதிகளை ஈர்க்கும் வகையில் ஒரு பொய்யான பிரகடனத்தையே ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டிருக்கிறதாம்.
காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் அம்ஷிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மே 10-ந் தேதி மோதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் தங்களது கட்டுப்பாட்டில் ஒரு மாகாணத்தை உருவாக்கிவிட்டோம் என பிரகடனம் செய்திருக்கிறது ஐ.எஸ். அமைப்பு.

அரபி மொழியில் விலாயத் ஆப் இந்த் என இதனை பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ். இயக்கம். ஆனால் இதனை நிராகரித்துள்ளனர் ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள்.
மேலும் அப்படி எந்த ஒரு பகுதியும் தீவிரவாதிகள் வசம் இல்லை. சர்வதேச அளவில் தங்களது இயக்கத்துக்கு ஆட் சேர்க்க இப்படி ஒரு பொய்யான பிரசாரத்தை ஐ.எஸ். இயக்கம் மேற்கொண்டு வருகிறது என்கின்றனர் அந்த அதிகாரிகள்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் எந்த தீவிரவாத அமைப்பும் தாக்குதல் நடத்தினாலும் தாங்களே நடத்தியதாக பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications