தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் கை கோர்ப்பு.. டெல்லியில் இஸ்ரேல் அதிபர் உறுதி

பயங்ரவாதம், தீவிரவாத செயல்களை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரேல் உறுதி எடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ரீயுவன் ரில்வின் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பயங்கரவாதம், தீவிரவாதச் செயல்களினால் இரு நாடுகளும் ஒரேமாதிரியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதால் அந்த கொடூர நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து செயல்படுவது என இஸ்ரேல் தீர்மானித்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் ரீயுவன் ரில்வின் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து, டெல்லியில் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பயங்கரவாதம் தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர் கொண்டுள்ளன. இதனால் உலக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவது என இங்கு உறுதி அளிக்கின்றேன்.

Israel commits to jointly fight menace of terrorism

இந்த நாட்டில் உள்ள திறன்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர இங்கு வந்துள்ளோம் என்றார் அதிபர் ரில்வின். பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருவது குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார்.

கனணி குற்றம் குறித்து பேசிய ரில்வின், இது அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பிரச்னை என்றும், அது யுக்தியான சவால் என்றும் கூறினார். அனைத்து துறையிலும் உரிய ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்பான உலகை உருவாக்க இஸ்ரேல் துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பான உலகை உருவாக்க இஸ்ரேலுடன் துணை நிற்கும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

உணவு பாதுகாப்பு குறித்துப் பேசிய ரில்வின், அடுத்த தலைமுறைக்காக விவசாயம், சுற்றுச் சூழல், உணவு, நீர்வளம் ஆகியவற்றுக்கு வித்திட்டு வருகின்ற நிபுணர்களின் பணிகள் பாராட்டத்தக்கது என்று கூறினார். இதற்கான வேலைகளில் இரு நாட்டு நிபுணர்களும் ஏற்கனவே ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சிறப்புரையை நினைவுகூறும் விதமாக இந்திய சகோதர சகோதரிகளே என்ற வார்த்தையை குறிப்பிட்டு ரில்வின் பேசினார்.

பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் ஏற்கனவே உரிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும், அந்த நடவடிக்கை இரு நாடுகளின் வளர்ச்சிக்காக தொடரும் என்றும் ரில்வின் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிக்காக 4 வண்ண புரட்சியை வடிவமைத்துள்ள பிரதமர் மோடியின் திட்டத்தில் இஸ்ரேல் முக்கிய பங்காற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்,

அதாவது மஞ்சள் கலர் சூரிய மின் சக்திக்கும், வெண்மை பால் உற்பத்திக்கும், பச்சை விவசாய மேம்பாட்டுக்கும், நீல நிறம் நீர்வள மேலாண்மைக்கும் என நான்கு வண்ண புரட்சித் திட்டத்தை பிரதமர் மோடி தீட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+