குண்டு கட்டாக தூக்கி ஜெகனை ஆம்புலன்சில் ஏற்றிய போலீஸ்! மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தியும் ஜெகன் மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 5ம் தேதி தொடங்கினார்.

5வது நாளை எட்டியுள்ள உண்ணாவிரதத்தால் ஜெகன் மோகனின் உடல் நிலை மோசமடைந்தது. சர்க்கரையின் அளவு குறைந்து வருவதால் கோமா நிலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனாலும், ஜெகன்மோகன் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, நள்ளிரவில் ஜெகன்மோகன் ரெட்டியை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது, அவரது கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆனாலும், ஜெகன்மோகன் ரெட்டியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே, ஜெகன்மோகன் ரெட்டியை கைது செய்யவில்லை என்றும் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications