வெளியிலிருந்து தூக்கி எறியப்படும் சிம், செல்போன்... திஹார் சிறை சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரிக்க முடி
டெல்லி: சிறைவளாகத்திற்குள் தடை செய்யப் பட்ட பொருட்களை வெளியில் இருந்து வீசுவதைத் தடுக்கும் வகையில், திஹார் சிறையின் சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பொதுவாக செல்போன், போதைப் பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லவோ, அல்லது அங்குள்ள கைதிகளுக்கு அளிக்கவோ தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால், தடையை மீறிச் சிலர் சட்டவிரோதமான முறையில் அவற்றை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்கின்றனர்.
அந்தவகையில், நாட்டின் மிகவும் பாதுகாப்பு மிக்க சிறைகளில் ஒன்றாக திஹார் சிறையில் இத்தகைய அத்துமீறல்களைத் தவிர்க்கும் வகையில் அதன் சுற்றுச் சுவர் உயரத்தை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய பொருட்கள்...
திஹார் சிறையில் சிறை எண் 1, 8 மற்றும் 9 ஆகியவை சாலையோரம் உள்ள சுற்றுச் சுவரை ஒட்டி அமைந்துள்ளன. இந்த சுற்றுச் சுவரின் உட்பகுதியில் சமீபகாலமாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் டென்னிஸ் பந்து, காலுறை, சிறிய பொட்டலங்கள் ஆகியவற்றை சிறைக் காவலர்கள் கண்டு பிடித்தனர்.

மொபைல், போதைப் பொருட்கள்...
அவற்றை ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட மொபைல் போன் உதிரி பாகங்கள், சிம் கார்டு, பிளேடு, புகையிலை பொருட்கள் சிறை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக துக்கி வீசப் பட்டது உறுதி செய்யப்பட்டது.

கைதிகளின் உபயோகம்...
இவ்வாறு மர்மநபர்கள் வெளியில் இருந்து தூக்கி வீசும் பொருட்களை, கைதிகள் சிறை வளாகத்தில் நடமாட அனுமதிக்கும் போது எடுத்துப் பயன்படுத்துவது தெரிய வந்தது.

சுற்றுச்சுவர் உயரம் அதிகரிப்பு...
எனவே, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க திஹார் சிறையின் சுற்றுச் சுவரின் உயரத்தை 4 முதல் 5 அடி வரை அதிகரிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கண்காணிப்பு பலம்...
மத்திய பொதுப்பணித் துறை மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், சாலையை ஒட்டி உள்ள மூன்று சிறைகளின் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியை பலப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள்...
அதேபோல், ‘சிசிடிவி' கேமராக்களின் எண்ணிக்கையையும், 500-ல் இருந்து ஆயிரத்து ஐநூறாக உயர்த்தவும் சிறை நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

பலகட்ட சோதனை...
இது தொடர்பாக திஹார் சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறையின் நுழைவு வாயில்களில் பலகட்ட சோதனை நடத்தப் படுவதால், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வது மிகவும் கடினம். அதனால், இப்பொருட்களை வெளியில் இருந்து துாக்கி வீசுகின்றனர்' எனத் தெரிவித்துள்ளனர்.

கம்பி வலை அமைப்பது...
மேலும், சுற்றுச் சுவர் உயரம் அதிகரித்த பின்பும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், அதற்கு மேல் கம்பி வலை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications