ஜல்லிக்கட்டுக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றது ஏன்? - விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி கோர்ட்டுக்கு சென்றது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

இதனை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து மத்திய அரசின் அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், "மத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் பல்வேறு கோர்ட்டுகளில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. இது போன்ற நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அறிவுரை வழங்கும் அமைப்பு மட்டுமே. கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பு வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை கோர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து வாரியம் சுப்ரீம்கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி எந்த வழக்கையும் தாக்கல் செய்வதற்கு விலங்குகள் நல வாரியத்துக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. எனவே வாரியத்துக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கேட்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறி உப்புச் சப்பில்லாத அறிவிக்கையை விட்டு மத்திய அரசு முன்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை ஏமாற்றியது. இதனால் வரும் தேர்தலில் தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில்தான் திடீரென விலங்குகள் நல வாரியம் மீது மத்திய அரசு பாய்ந்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications