திட்டமிட்ட தேதியில் ஜல்லிக்கட்டு.. உச்சநீதிமன்றத்தின் இவ்விரு உத்தரவுகள்தான் காரணம்!
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெற மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் குறிப்பிட்ட தேதியில், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு தடைகள் வர வாய்ப்பில்லை.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கொண்டு வந்த அறிவிக்கை ரத்து செய்யப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை வழக்கின் எதிர்தரப்பாளர்களான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நடவடிக்கையை ஏற்க கூடாது என்று அவை கோரின.

இன்று விசாரணை
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதேபோல தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தனர்.
இந்த அனைத்து மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. இரு நபர் நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது.

தடைக்கு மறுப்பு
அப்போது தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை கோரிய கியூப்பா அமைப்பின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. அதேபோல, மத்திய அரசு தனது அறிவிக்கையை ரத்து செய்ததற்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது. எனவே அறிவிக்கையை எதிர்த்து நடந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் இரு பெரும் தடைகளில் இருந்து ஜல்லிக்கட்டு தப்பித்துள்ளது.

ஆறு வாரங்களில் பதில்
தமிழக அரசு ஜல்லிக்கட்டு சட்டம் ஏன் இயற்றப்பட்டது என்பது குறித்து, இன்னும் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே இன்னும் 6 வாரங்களுக்கு நடுவில் ஜல்லிக்கட்டு தொடர்பான தடை ஆணை எதுவும் நீதிமன்றத்தில் இருந்து வெளியாக வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே ஜல்லிக்கட்டு திட்டமிட்ட நாட்களில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பகுதிகளில் நடைபெறும் என்பது உறுதியாகிவிட்டது.

நல்லவேளை
ஒருவேளை மத்திய அரசின் அறிவிக்கை ரத்து நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றிராவிட்டால் அது சட்ட போராட்டத்தில் தமிழகத்திற்கு பின்னடைவாக அமைந்திருக்கும் என்பது இதில் கவனிக்கத்தக்கது. இப்போது சட்டப்போராட்டத்தில், தமிழகத்தின் கைக்கு பலம் கிடைத்துள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications