Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் அதிகாலையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு- காஷ்மீரில் இன்று அதிகாலையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் அதிகாலை நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலின்போது 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச் சண்டையின்போது வீட்டுக்குள் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்தனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர்.

Jammu: 3 soldiers killed in terrorist attack

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். பதிலுக்கு வீரர்களும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.

எனினும், தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 4 வீரர்கள் காயமடைந்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து வீட்டில் இருந்த பெண் ஒருவரும் பலியானார். கடந்த 3 வாரங்களில் நிகழ்ந்த 4-ஆவது தாக்குதல் இதுவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+