ஜம்மு காஷ்மீர் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது! 58.85% வாக்குகள் பதிவு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மலை 5 மணி வரை நடைபெற்றிருக்கிறது. இரவு 7.30 மணி நிலவரப்படி 58.85% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் கட்ட தேர்தலில் 24 தொகுதிகளில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 23 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டது.

2 ஆக பிரிப்பு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் 5 ஆண்டுகால பதவிக் காலம் கொண்ட சட்டசபையுடனும் லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபையே இல்லாததாகவும் இருக்கும் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. 2019-க்கு முன்னர் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை பதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
3 கட்ட சட்டசபை தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இன்று 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 26 தொகுதிகளில் செப்டம்பர் 25 மற்றும் 40 தொகுதிகளில் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 2-வது மற்றும் 3-வது கட்ட தேர்தல் நடைபெறும். அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
களத்தில் கட்சிகள்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹா கட்சி- ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி, ஆம் ஆத்மி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.
10 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் 24 தொகுதிகளில் காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
219 வேட்பாளர்கள்: முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 பேர் வேட்பாளர்கள். இவர்களில் 90 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் 23,27,580. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 11,76,462 , பெண் வாக்காளர்கள் 11,51,058. 24 தொகுதிகளிலும் 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 14,000 பேர் முதல் கட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்..
விஐபி வேட்பாளர்கள்: முதல் கட்ட தேர்தலில் சிபிஎம் கட்சியின் யூசுப் தரிகாமி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷகினா இடூ, மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்தாஜ் மட்னி, அப்துல் ரெஹ்மான் வீரி, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஆகியோர் விஐபி வேட்பாளர்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications