ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை.. ராணுவ வீரர் மரணம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஜம்மு காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்..வீடியோ
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில், 2 பேரை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர். ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
பந்திபுராவிலுள்ள பன்னார் என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது.

நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்தத 4 பேர் கொல்லப்பட்டனர். இன்று தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதன் மூலம், தீவிரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி உதவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரம்ஜான் மாதம் என்பதால் இந்திய பாதுகாப்பு படையினர் எல்லையில், தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தாமல் இருந்தனர். இந்த சூழ்நிலையில் இரு நாடுகள் நடுவேயான நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கத்தில் தாக்குதல்களை எதிர் தரப்பு ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications