ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - 2 ராணுவ வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா என்ற இடத்தில் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் இல்லை. தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சமீபகாலமாக ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications