ஜம்மு காஷ்மீரில் இப்படி எல்லாம் நடக்குதே.. விடிஞ்சா தேர்தல்..இரவோடு இரவாக கட்சி தாவிய வேட்பாளர்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பிரிவினைவாதி பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாத் கட்சி வேட்பாளர் முகம்மது இக்பால் ஷோபி திடீரென தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாக் கட்சியும் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமியின் மாஜி தீவிரவாதிகளும் கூட்டணி அமைத்துள்ளதற்கு எதிராக தாம் இந்த முடிவை எடுத்ததாக வேட்பாளர் முகம்மது இக்பால் ஷோபி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் நாளை மறுநாள் செப்டம்பர் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் ஒன்று புல்வாமா. இத்தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளராக முகம்மது கலீல் பந்த், மக்கள் ஜனநாயகக் கட்சியின் வஹீத் உர் ரெஹ்மான் பாரா, பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாக் கட்சியின் முகம்மது இக்பால் ஷோபி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
புல்வாமாவில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று இரவு திடீரென தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லாவை அவாமி இதிஹாக் கட்சி வேட்பாளர் முகம்மது இக்பால் ஷோபி நேரில் சந்தித்து தம்மை தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக முகம்மது இக்பால் ஷோபி கூறியதாவது: அவாமி இதிஹாக் கட்சி வேட்பாளராக புல்வாமாவில் போட்டியிட்டேன். ஆனால் திடீரென தமாஜ் இ இஸ்லாமி அமைப்புடன் எங்கள் கட்சி கூட்டணி அமைத்துவிட்டது. செப்டம்பர் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திடீரென இந்த கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை தேசிய மாநாட்டுக் கட்சிதான் பிரம்மாண்ட வெற்றியைப் பெற உள்ளது. தற்போதைய நிலையில் வேட்பு மனுவை திரும்பப் பெற முடியாது. ஆகையால் வாக்காளர்கள் அனைவரும் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களையே ஆதரிக்க வேண்டும். இவ்வாறு முகம்மது இக்பால் ஷோபி கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications