காஷ்மீர் மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை நாடாளுமன்றம் முடங்கும்.. வீதிதோறும் போராட்டம்- ராகுல் வார்னிங்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக "இந்தியா" தமது முழு பலத்தையும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தும்; ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்துக்காக வீதிகள் தோறும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 18-ந் தேதி முதல் கட்ட தேர்தலும் இன்று 2-வது கட்ட தேர்தலும் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் கடைசி மற்றும் இறுதி கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்ட வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்முவில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும். சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும். அப்படி மாநில அந்தஸ்தை தர மறுத்தால் இந்தியா கூட்டணி தமது முழு பலத்தையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும். ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து கோரி வீதிகள் தோறும் போராட்டங்கள் நடைபெறும்.
நாடு விடுதலைக்குப் பின்னர் யூனியன் பிரதேசங்கள்தான் மாநிலங்களாக அந்தஸ்து பெற்றிருக்கின்றன.ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் உருவானது. பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் உருவானது; மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் உருவானது.
ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாக கூறப்பட்ட கொடுமை ஜம்மு காஷ்மீரில்தான் நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீரை 2- ஆகப் பிரித்து இந்த மக்களுக்கு மிகப் பெரும் அநீதியை இழைத்துவிட்டது பாஜக. அப்படியான ஒரு துயரம் நிகழ்ந்திருக்கக் கூடாது.
ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாஜக பறித்துவிட்டது. ஜம்மு காஷ்மீரில் இப்போதும் சொந்த மண்ணின் மக்களால் ஆளப்படவில்லை. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மண்ணை ஆண்டு கொண்டிருக்கின்றனர். ஆகையால்தான் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளை நாங்கள் மீட்டெடுப்போம் என உறுதியளிக்கிறோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications