ஜம்மு காஷ்மீரில் சொல்லியடித்த காம்ரேட்.. தொடர்ந்து ஐந்தாவது முறை அதே தொகுதியில் வெற்றி
ஜம்மு காஷ்மீர்: மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பார் என்றும் அறிவித்துவிட்டனர். குல்காம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் நிர்வாகி முகமது யூசப் தாரிகாமி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடக்காமல் இருந்தது. இந்தாண்டு தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. முக்கியமாக ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.
காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும் கூட்டணி அமைத்தது. பாஜக தனித்து களமிறங்கியது. அதேபோல முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கினர். ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 46 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். மொத்தம் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன.
எக்சிட் போல் முடிவுகளில், பெரும்பாலும் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது. அதேபோல தான் தேர்தல் முடிவுகளும் அமைந்தன. தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக இதுவரை ஜம்மு காஷ்மீரில் தனித்து வெற்றி பெற்றது இல்லை.
இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணியில் சிபிஎம் கட்சி மூத்த தலைவர் முகமது யூசஃப் தாரிகாமி குல்காம் தொகுதியில் போட்டியிட்டார்.
அவர் ஏற்கனவே இந்த தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு எம்எல்ஏ ஆகியுள்ளார். இதையடுத்து ஐந்தாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டார். குல்காம் தொகுதி காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. காஷ்மீர் தெற்கில் குல்காம் தொகுதி அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தாரிகாமி அந்தத் தொகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இருப்பினும் கடந்த காலங்களை போல இந்தமுறை அவர் எளிதில் வெற்றி பெற முடியாது என நினைத்தனர். காரணம் தரிகாமியை எதிர்த்து, ஜமாத் இ இஸ்லாமியின் சயர் ரேசியை எதிர்த்து போட்டியிட்டார்.
குல்காம் தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும் தாரிகாமி, சயர் ரேசி, மக்கள் ஜனநாயக கட்சியின் நசீர் அகமது ஆகியோருக்கு இடையே தான் பிரதான போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகளில் தாரிகாமி 33,634 வாக்குகளை பெற்றார். சயர் ரேசி 25,000 வாக்குகளை பெற்றார். இதன்மூலம் 7,838 வாக்குகள் வித்தியாசத்தில் தாரிகாமி வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் குல்காம் தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications