ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட 2 மாத தடை நீக்கம்- இன்று முதல் அனுமதி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 2ந்- தேதி அமர்நாத் யாத்திரையை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அமர்நாத் யாத்ரீகர்களும் சுற்றுலா பயணிகளும் ஜம்மு காஷ்மீரை விட்டு உடனே வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கிற உளவுத்துறை தகவலால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசு அப்போது தெரிவித்தது. அதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருளில் காஷ்மீர்ல்
மேலும் ஆயிரக்கணக்கானோர் அடுத்தடுத்து காஷ்மீர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த சூழலில் ஆகஸ்ட் 5-ந் தேதி திடீரென ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்கிற மாநிலமே ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

ஊடக கட்டுப்பாடுகள்
இது சர்வதேச விவகாரமாக உருவெடுத்தது. ஜம்மு காஷ்மீர் ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையே முடங்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு அப்படி எதுவுமே இல்லை என கூறியது. உண்மை நிலையை அறிய சென்ற குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஶ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் தலையீடு
பின்னர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு மெல்ல மெல்ல காஷ்மீர் நிலவரம் வெளியே தெரிய வரத் தொடங்கி இருக்கிறது. அண்மையில் வீட்டு சிறையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை கட்சி நிர்வாகிகள் சந்திக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது.

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்
தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாஜக மற்றும் சிறு கட்சிகளைத் தவிர பிரதான கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் கட்சி தேர்தலை புறக்கணிப்பதாகவே அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஆகஸ்ட் 2-ந் தேதி விதிக்கப்பட்டிருந்த தடையையும் மத்திய அரசு நீக்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications