மீண்டும் 370வது பிரிவு... காஷ்மீர் அரசியல் கட்சிகளின் 'குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி' உதயம்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட அம்மாநில அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி இருப்பதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் எனும் இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது பொதுபாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. பல மாத சிறைவாசங்களுக்குப் பின்னர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா - ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். 14 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் மற்றொரு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி 2 நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலையான மெகபூபா முப்தியை பரூக் அப்துல்லாவும் உமர் அப்துல்லாவும் நேரில் சந்தித்து வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாஜக அல்லாத அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்துவதற்கான போராட்ட வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, அனைத்து அரசியல்களும் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி உள்ளோம். கடந்த ஆண்டு 370-வது பிரிவு ரத்து செய்யக் கூடாது என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி குப்கரில் பிரகடனம் வெளியிட்டோம். அந்த பிரகடனத்தை செயல்படுத்துவதற்கான ஒரு அமைப்பாக இது செயல்படும் என்றார். இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரிகளும் இடம்பெற்றுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications