காணாமல் போன கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா உடல் சபர்மதி ஆற்றில் கரை ஒதுங்கியது

காணாமல் போன கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவின் தாத்தா சங்கோத் சிங் பும்ராவின் உடல் அகமதாபாத் அருகே சபர்மதி ஆற்றில் இன்று கரை ஒதுங்கியது.

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: காணாமல் போன கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவின் தாத்தா சங்கோத் சிங் பும்ராவின் உடல் அகமதாபாத் அருகே சபர்மதி ஆற்றில் இன்று கரை ஒதுங்கியது.

பும்ராவின் தாத்தா சங்கோத் சிங் பும்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளூர் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் தாம் மரணமடைவதற்குள் பேரன் பும்ராவை பார்க்க விரும்புவதாக உருக்கமாக குறிப்பிட்டிருந்தார் சங்கோத்.

Jasprit Bumrah’s grandfather’s body found in Sabarmati River

இதன் பின்னர் கடந்த 8-ந் தேதி முதல் சங்கோத்தை காணவில்லை என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது

இந்நிலையில் சங்கோத்தின் உடல் இன்று அகமதாபாத் அருகே சபர்மதி ஆற்றில் கரை ஒதுங்கியது. பும்ராவை அவரது தாயார பார்க்கவிடவில்லை என்பதும் சங்கோத்தின் புகார் என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ராவின் தாத்தா சங்கோத் சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+