பாஜகவில் இருந்து விலகினார் ஜஸ்வந்த்சிங்!
Subscribe to Oneindia Tamil
பார்மர்: லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் தராததால் பாரதிய ஜனதாவில் இருந்து முறைப்படி இன்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் விலகினார்.
லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று பாஜக மேலிடத்திடம் ஜஸ்வந்த்சிங் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு சீட் தரப்படவில்லை.

அவர் கேட்ட பார்மர் தொகுதியில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய சோனாராம் செளத்ரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் பார்மர் தொகுதியில் இன்று சுயேட்சையாக வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அத்துடன் பாரதிய ஜனதா கட்சியை மிக மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று முறைப்படி பாரதிய ஜனதாவைவிட்டும் அவர் விலகினார். அப்போது பேசிய ஜஸ்வந்த்சிங், மோடியை முன்வைத்து தற்போது நடைபெற்று வரும் நாடகங்கள் பாஜகவுக்கு அழிவையே தரும் என்றார்.












Click it and Unblock the Notifications