ஜெ. அப்பீல் வழக்கு தீர்ப்பு... இலவு காத்த கிளியாக காத்திருந்த இலங்கை மீடியாக்கள்..
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்காக இலங்கை ஊடகங்கள் இலவு காத்த கிளியாக காத்திருந்தன.
இலங்கையில் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தமது பதவி காலத்தில் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டவர் ஜெயலலிதா. ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
கடந்த 4 ஆண்டுகால அண்ணா தி.மு.க. ஆட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த ஒரு விளையாட்டு வீரரும் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு வீரரும் இலைங்கைக்கு விளையாட செல்லவும் அனுமதிக்கப்பட்டது இல்லை.
இதனால் இலங்கை அரசும் இலங்கை ஊடகங்களும் ஜெயலலிதா தொடர்பான வழக்கில் அதீத ஆர்வம் காட்டியே வந்தன. இன்று ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பும் பின்பும் இலங்கையின் தமிழ், ஆங்கில, சிங்கள ஊடகங்கள் வெளியிட்டிருந்த ஜெயலலிதா வழக்கு குறித்த செய்தியின் தலைப்புகள்:
ஆங்கிலம்:
டெய்லி மிர்ரர் (dailymirror): Jayalalithaa acquitted of corruption charges
அததீரனா (Adaderana) : Jayalalitha aquitted; to be CM again?
லங்காபுவத் (lankapuvanth): Jayalalithaa acquitted in disproportionate assets case
டெய்லி நியூஸ் (daily news): s: Jayalalithaa Acquitted of Corruption Charges by Karnataka High Court: 10 Developments
சிங்களம்:
தினமின: ජයලලිතාගේ නිදහසත් සමඟ තමිල්නාඩුව පුරා සැනකෙළි
லக்பிம: නැවත මහඇමැතිකම ලැබෙන හැඩ
லங்கதீப: ජයලලිතා නිදහස් : චෙන්නායි පුරා උත්සව
தமிழ்:
தினகரன்: ஜெயலலிதாவின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பரபரப்பான தீர்ப்பு இன்று
வீரகேசரி: ஜெயலலிதா விடுதலை