ஜெ. முதல்வராகும் முன்பு தீர்ப்புக்கு தடை வாங்குங்கள்: கர்நாடக முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்
பெங்களூரு: ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதத்தை பாமக தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணி சித்தராமையாவிடம் இன்று அளித்தார்.
அந்த கடிதத்தில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ஆச்சாரியாவை அரசு வழக்கறிஞராக சிறப்பாக செயல்பட்ட ஆச்சாரியாவுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற முனைப்பில் ஆச்சாரியா செய்த கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால்தான், ஜெயலலிதாவுக்கு, தண்டனை கிடைக்கும் நிலை உருவானது.

ஆச்சாரியா உழைப்பு வீண்
ஆனால், ஆச்சாரியாவின் அனைத்து கடின உழைப்பையும், கடந்த 11ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வீணாக்கிவிட்டது. ஏனெனில் அந்த தீர்ப்பில், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 8.12 சதவீத அளவுக்கு சொத்து சேர்த்ததால் அவர் விடுதலை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், கடன் தொகையை கூட்டியதில் ஏற்பட்ட தவறால்தான் இவ்வாறு தீர்ப்பு வந்துள்ளது. சரியாக கூட்டினால், வருமானத்துக்கு அதிகமாக 76.75 சதவீத அளவுக்கு சொத்து குவிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

விடுதலை செய்ய முடியாது
கிருஷ்ணானந்த் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு படி வருவாய்க்கு அதிகமாக 10 சதவீதம் வரை சொத்து இருந்தால் தப்பில்லை என்றும், ஆந்திர அரசின் சுற்றறிக்கை படி 20 சதவீதம் வரை சொத்திருந்தால் தவறில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால், கூட்டலை சரியாக போட்டால் வரும் 76.75 சதவீத மதிப்பு அடிப்படையில் ஜெயலலிதாவையோ அவருடன் சேர்ந்தவர்களையோ விடுதலை செய்ய முகாந்திரம் இல்லை.

நீதியை கேலி செய்கிறார்
இது மிகவும் முக்கியமான விஷயம். இந்த குழப்பத்துக்கு நடுவே, ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக முயற்சி செய்கிறார். இது நீதியை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கையாகும். எனவே, இன்னும், நிலைமை மோசமாவதற்குள், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடையை வாங்க வேண்டும்.

நீதியில்லையேல் அமைதியில்லை
தமிழில் பிரபல சொல்லாடல் ஒன்று உள்ளது. நீதியில்லையேல், அமைதியில்லை என்பது அந்த சொல்லாடல். எனவே, நீதியை நிலைநாட்ட கர்நாடக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications