மக்கள் மன்றத்தில் என்னை வீழ்த்த முடியாதவர்கள், பழி தீர்த்து விட்டனர்.. ஜெயலலிதா
பெங்களூர்: பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கீல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை அறிவித்ததும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசிய பேச்சு விவரம் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி மற்றவர்களுக்கு தலா ரூ. 10 கோடி அபராதம் விதித்தது தனி நீதிமன்றம்.
இதையடுத்து நால்வரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனுக்காகப் போராடிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை அறிவித்து முடித்த பின்னர் ஜெயலலிதா கோர்ட்டில் பேசியுள்ளார். அதுகுறித்த விவரம்...

அரசியலுக்கு வருவதற்கு முன்பே வசதியானவர்
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவர்.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பப் பெண்
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, அந்த காலத்திலேயே திரைப்படங்களில் நடிக்க பல கோடிகளை சம்பளமாகப் பெற்றவர்.

எனக்கென்று குடும்பம் இல்லை
எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. எந்த குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

ஒரே ஒரே சொத்து மக்கள்தான்
எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள் தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கே.

அரசியல்வாதிகளின் பழி தீர்ப்பு இது
மக்கள் மன்றத்தில் என்னை சந்தித்து பகை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள், இந்த வழக்கு மூலம் என்னை பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர், அவ்வளவு தான் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா என தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications