ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் பதிலளிக்க 6 வார காலம் அவகாசம்: கர்நாடகா, அன்பழகன் தரப்பு மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் கோரி கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கானது வரும் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்கு வரவிருந்த நிலையில், கர்நாடகம் மற்றும் அன்பழகன் தரப்பு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Jayalalithaa asset case: Karnataka and Anbalagan file petition before SC seeking six weeks time

இவ்விரு தரப்பும்தான், இவ்வழக்கில் எதிர்தரப்பினராக செயல்படுகின்றனர். இந்நிலையில், இவர்கள் தாங்கள் பதிலளிக்க 6 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் வழக்கின் விசாரணையானது மேலும் சில வாரங்கள் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நீதிபதி என்ன முடிவெடுக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தற்போதைய தலைமை நீதிபதி தத்து, வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார். வழக்கு இழுத்தடிக்கப்பட்டால் அவர் ஓய்வு பெற்ற பிறகு வரும் புதிய தலைமை நீதிபதி மேற்பார்வையில்தான் வழக்கு நடைபெற வேண்டிய நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+