ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: பிப்ரவரி 23க்கு பிறகு இழுத்தடிக்க விடாமல் நடத்த கர்நாடகா திட்டம்
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கர்நாடகா விரும்புகிறது. எனவே, பிப்ரவரி 23ம் தேதி முதல் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதில் கர்நாடகா முனைப்பு காட்டும் என்று அம்மாநில சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் மனு, சுப்ரீம் கோர்ட்டின் இரு நீதிபதிகள் பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதிகட்ட விசாரணை நடைபெறும் என்று கடந்த முறை நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் இருந்து நேற்று ஒரு மனு உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டது. இதையேற்று, விசாரமஐயை, பிப்ரவரி 23ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டத்துறை வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ச்சியாக நடத்தி முடிக்கவே கர்நாடக தரப்பு விரும்புகிறது. 23ம் தேதி மீண்டும் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கைவிடுக்கப்பட்டால், அதை கர்நாடக தரப்பு எதிர்க்கும்.
மேலும், அருணாச்சல பிரதேசத்தில், குடியரசு தலைவர் ஆட்சியை, அமல்படுத்தியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை விசாரிக்கும், நீதிபதிகளில் ஒருவர், ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் நீதிபதி. அருணாச்சல பிரதேச வழக்கு, பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அது அவசரம் சார்ந்த வழக்கு என்பதால், நீதிபதியால், ஜெயலலிதா வழக்கில் கவனம் செலுத்த முடியாது என்று நினைத்தோம். எனவேதான், சொத்துக்குவிப்பு வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தபோது, கர்நாடக தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications