டெல்லியிலும் அம்மா உணவகம்.. பொங்கலுக்காக 3 நாட்கள் திறப்பு.. செம ஹிட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் பெரும் வரவேற்புடன் செயல்பட்டு வரும் அம்மா் உணவகத்தின் சிறப்புக் கிளை, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் திறக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ள இந்த கிளை 3 நாட்களுக்கு மட்டும் செயல்படும்.

ஜனவரி 14ம் தேதி வரை இந்த சிறப்பு ஸ்டால் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இல்ல வளாகத்திலேயே இது செயல்படுகிறது. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ. 5க்கு எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் ஆகியவை வழங்கப்படும்.

Jayalalithaa's one-rupee idlis now in Delhi

தமிழகத்தைப் போலவே இந்த தற்காலிக உணவகத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. திறந்த முதல் நாளே கூட்டம் அலை மோதியது. உணவை சாப்பிட்டவர்கள் பிரமாதம் என்று பாராட்டவும் செய்தனர்.

கடந்த ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் முதலிலும், பின்னர் அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது தமிழகத்தில் பெரும் வரவேற்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது நினைவிருக்கலாம்.

தமிழகம் முழுவதும் தற்போது 200 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு நாளைக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை சாப்பிட்டுச் செல்கின்றனர்.

அம்மா உணவகம், தமிழகத்தில் இன்ஸ்டன்ட் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+