ஜெ. அப்பீல்: மோடி ஏன் வாயை மூடி பேசாமல் இருக்கிறார்?.. ஜெயராம் ரமேஷ் கேள்வி
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அப்பீல் செய்வது தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் அமைதி காக்கிறார் என்பதை விளக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றிய முடிவு குறித்து பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார். மேல்முறையீடு செய்யுமாறு கர்நாடக அரசை ஏன் நிர்பந்திக்கிறார்கள்?
உண்மையில், அசல் மனுதாரர்கள் அனைவரும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள்தான் என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். கர்நாடக அரசை பகடைக்காயாக பயன்படுத்துவதே அவர்கள் நோக்கம்.

இதில் பிரதமர் மோடியின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அருண் ஜெட்லியும் இதுபற்றி கருத்தை தெரிவிக்க வேண்டும். உண்மையில், சுப்ரமணியன் சாமி பா.ஜ.க.வின் மூத்த தலைவர். இன்றைய பதவியேற்பு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் இருவரும் பங்கேற்று இருக்கிறார்கள். அப்படி என்றால் இவ்வழக்கில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?
கர்நாடக அரசு தற்செயலாக சுப்ரீம் கோர்ட்டால் உள்ளே இழுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது கர்நாடக அரசே வழக்கை தொடுத்ததை போல மாயபிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. அது அல்ல உண்மை. நாங்கள் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றார் ஜெயராம் ரமேஷ்.
-
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications