முசாபர்நகர் கலவரத்தை தூண்டிய பாஜக எம்எல்ஏக்களுக்கு பாராட்டு விழாவா: ஜனதா தளம்(ஐ) கண்டனம்!
பாட்னா: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு பாரட்டு விழா நடத்தியதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இரு பிரிவிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில். 62 பேர் உயிரிழந்தனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து அகதிகளாக முகாம்களில் வசித்து வருகின்றனர்
இந்த வழக்கில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சங்கீத் சோம், சுரேஷ்ராணா உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்.
அத்துடன் இருவருக்கும் ஜாமீனும் கிடைத்தது. ஜாமீன் கிடைக்கப்பெற்ற இரண்டு எம்எல்ஏக்களுக்கும் பாராட்டு விழா நடத்த பாஜவினர் முடிவுசெய்தனர். பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆக்ரா கூட்டத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவ் கூறுகையில், பாராட்டு விழா நடத்தியது மிகவும் கண்டத்திற்குரியது. இதன் மூலம் அவர்களின் உண்மையான முகம் நாட்டு மக்களுக்கு தெரிந்துள்ளது, புத்திசாலித்தனமாக மோடி வருகைக்கு முன் பாராட்டுவிழா நடத்தியுள்ளனர். முகாம்களில் வாழும் 50 ஆயிரம் மக்களுக்கு பாஜக தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications