கலால் வரி உயர்வு குறித்து ஆராய குழு... ஸ்டிரைக் வாபஸ்... 18 நாட்களுக்குப்பின் நகைக்கடைகள் திறப்பு
டெல்லி: கலால் வரி உயர்வு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
கடந்தமாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2ம் தேதி முதல் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் குதித்தனர் நகைக்கடை உரிமையாளர்கள்.
முதலில் 3 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டம், பின்னர் காலவரையற்றதாக மாறியது. இதனால் தங்க, வெள்ளி ஆபரணங்கள் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

18 நாட்களாக போராட்டம்...
இந்தப் போராட்டத்தையொட்டி தமிழ்நாட்டில் மட்டும் 35,000 நகைக்கடைகள் மூடப்பட்டன. நகைக்கடைகள், உற்பத்தி கூடங்கள் மற்றும் அதில் பணியாற்றும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 18 நாட்களாக இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது.

வர்த்தகம் பாதிப்பு...
இந்த கடையடைப்புப் போராட்டத்தால் இந்தியாவில் ரூ.80,000 கோடி , தமிழகத்தில்ரூ. 6,500 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை...
இந்நிலையில் மத்திய அரசுடன் நகைக் கடை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலால் வரி நிர்ணயம் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு மாதத்துக்குள் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வாபஸ்...
அதனைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக டெல்லியில் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஸ்ரீதர் நேற்றிரவு அறிவித்தார்.

ஆய்வு குழு...
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கலால் வரி உயர்வு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதனை ஏற்று கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் கடைகள் அனைத்தும் திறக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

நகைக்கடைகள் திறப்பு...
அதன்படி, இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இனி வழக்கம் போல் நகைக்கடைகள் இயங்கும் என சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சல்லானியும் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications