கலால் வரி உயர்வு குறித்து ஆராய குழு... ஸ்டிரைக் வாபஸ்... 18 நாட்களுக்குப்பின் நகைக்கடைகள் திறப்பு
டெல்லி: கலால் வரி உயர்வு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
கடந்தமாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2ம் தேதி முதல் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் குதித்தனர் நகைக்கடை உரிமையாளர்கள்.
முதலில் 3 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டம், பின்னர் காலவரையற்றதாக மாறியது. இதனால் தங்க, வெள்ளி ஆபரணங்கள் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

18 நாட்களாக போராட்டம்...
இந்தப் போராட்டத்தையொட்டி தமிழ்நாட்டில் மட்டும் 35,000 நகைக்கடைகள் மூடப்பட்டன. நகைக்கடைகள், உற்பத்தி கூடங்கள் மற்றும் அதில் பணியாற்றும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 18 நாட்களாக இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது.

வர்த்தகம் பாதிப்பு...
இந்த கடையடைப்புப் போராட்டத்தால் இந்தியாவில் ரூ.80,000 கோடி , தமிழகத்தில்ரூ. 6,500 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை...
இந்நிலையில் மத்திய அரசுடன் நகைக் கடை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலால் வரி நிர்ணயம் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு மாதத்துக்குள் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வாபஸ்...
அதனைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக டெல்லியில் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஸ்ரீதர் நேற்றிரவு அறிவித்தார்.

ஆய்வு குழு...
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கலால் வரி உயர்வு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதனை ஏற்று கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் கடைகள் அனைத்தும் திறக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

நகைக்கடைகள் திறப்பு...
அதன்படி, இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இனி வழக்கம் போல் நகைக்கடைகள் இயங்கும் என சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சல்லானியும் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications