4 மாநிலத்தில் இருந்து ஆள்கள்.. தொகுதிக்கு 1 கோடி.. பாஜக மீது ஜார்கண்ட் முதல்வர் பரபரப்பு புகார்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் சட்டசபை தேர்தலில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். பல்வேறு மாநிலத்தவர்களை களத்தில் இறக்கி, ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ1. கோடி செலவு செய்வதாக புகார் வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு இந்த இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதனால் இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகளில் உள்ளன. இதற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், நாளை (நவம்பர் 20 ஆம் தேதியும்) நடக்கவுள்ளது. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சொரன் தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், மற்ற பகுதிகளை போல நம் மாநிலத்திலும் வெறுப்பு அரசியலை விதைத்து பாஜக ஆட்சியமைக்க காய் நகர்த்துகிறது. நம் மாநில கலாச்சாரமும், மக்களும் அவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்க மாட்டார்கள்.
வெறுப்பை பரப்பி தங்களின் அரசியல் அஜான்டாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என கனவு காண்கிறார்கள். இதைச் செய்வது மிகவும் எளிது. பாஜக அதில் கைத்தேர்ந்த கட்சி. ஆனால் நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன். இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன்.
எனக்கு எதிராக மலிவான அரசியல் செய்யவும், வெறுப்பு பிரச்சாரம் செய்வதற்காகவும் பாஜக ரூ.500 கோடிக்கு மேல் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இங்கிருந்து மட்டுமல்லாமல் பீஹார், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆள்களை அழைத்து வந்து எனக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். மக்கள் வெளியில் வருவதற்கே பயப்படுகிறார்கள். தேர்தல் நடக்கும்போது இங்கு வெளி மாநிலத்தவர்களுக்கு என்ன வேலை. ஒவ்வொரு சாலையிலும் பீஹார், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தவர்கள் தான் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுடன் மக்களாக அமர வைத்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.இப்படி திரைமறைவில் பல ரகசிய வேலைகளை செய்யும் பல புதிய உக்தியை பாஜக இங்கு கையாள்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.1 கோடி செலவு செய்துள்ளனர். தாங்கள் செய்த சாதனைகள் குறித்தோ, திட்டங்கள் குறித்தோ அவர்கள் பேச மாட்டார்கள். பொய் சொல்லி மக்களை பயமுறுத்தும் செயல்களில் தான் ஈடுபடுவார்கள்.
அவர்களின் பிரச்சாரத்தில் துளி கூட உண்மை இல்லை. நாங்கள் தேர்தல் பத்திரம் வைத்து யாரிடமும் நிதி பெறவில்லை. அவர்களை போல போலியாக செயல்படவில்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக, வெளிப்படையாக, தைரியமாக பேச வேண்டும். நாங்கள் அதைத்தான் செய்கிறோம். ஜார்கண்ட் மண்ணின் மைந்தனாக மக்கள் அறத்தின் பக்கம் நிற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மேலும் அவர் தனது பிரச்சாரத்தில் பாஜகவினர் தேர்தல் களத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஜார்கண்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஹேமந்தின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications