ஜார்க்கண்டில் சீரழித்தவனையே திருமணம் செய்ய வற்புறுத்தல்: 14 வயது மாணவி தற்கொலை
ராஞ்சி: ஜார்க்கண்டில் தன்னை பாலியல் பலாத்கராம் செய்த நபரையே திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால் 14 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா மாவட்டத்தில் 8ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி கடந்த 11ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை 24 வயது நபர் ஒருவர் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த நபரை கடந்த 12ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் அந்த குற்றவாளியை திருமணம் செய்து கொள்ளுமாறும், பலாத்கார புகாரை வாபஸ் பெறுமாறும் மாணவியின் குடும்பத்தாரை குற்றவாளியின் உறவினர்கள் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி நேற்று இரவு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications